இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பகுதியில் சற்றுமுன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த நிலநடுக்கம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
டெல்லியில் உணரப்பட்ட குறித்த நில அதிர்வு மிகவும் வலுவாக உணரப்பட்டதாக டெல்லி மக்கள் தெரிவித்தனர்.
அதேவேளை நில அதிர்வால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்த நிலையில் அவசர அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதேவேளை குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.