நேற்று இரவு வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலய இந்திரவிழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு ஒன்று பறந்து பருத்தித்துறை தும்பளை பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்து தீவிபத்து ஏற்பட்டிருந்தது.
யாழ் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கொடியிறக்க திருவிழாவின் இந்திரவிழா உற்சவம் நேற்று இரவு 07 மணியளவில் மிகசிறப்பாக இடம்பெற்றது.
இதில் முத்துமாரியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களை முத்துப்பல்லக்கில் பக்தர்கள் சுமந்தவண்ணம் வீதி உலா வந்தனர்.
இதன்போது வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு ஒன்று பருத்தித்துறை தும்பளை பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்ததால் வீட்டின் மேற்தட்டில் தீ விபத்து ஏற்பட்டிருந்ததுடன் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
வல்லை இந்திரவிழாவில் வானில் பறந்த புகைக் கூண்டு. தெய்வாதீனமாக தப்பிய குடும்பம். samugammedia நேற்று இரவு வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலய இந்திரவிழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு ஒன்று பறந்து பருத்தித்துறை தும்பளை பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்து தீவிபத்து ஏற்பட்டிருந்தது.யாழ் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கொடியிறக்க திருவிழாவின் இந்திரவிழா உற்சவம் நேற்று இரவு 07 மணியளவில் மிகசிறப்பாக இடம்பெற்றது.இதில் முத்துமாரியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களை முத்துப்பல்லக்கில் பக்தர்கள் சுமந்தவண்ணம் வீதி உலா வந்தனர்.இதன்போது வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு ஒன்று பருத்தித்துறை தும்பளை பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்ததால் வீட்டின் மேற்தட்டில் தீ விபத்து ஏற்பட்டிருந்ததுடன் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.