உலக வங்கியின் குழுவொன்று நேற்றைய தினம் உலக வங்கியின் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கள விஜயத்தை வடமாகாண ரீதியில் மேற்கொள்வதற்காக நேற்றைய {18} தினம் உலக வங்கியின் குழுவொன்று வருகை தந்தது.
முதற்கட்டமாக நேற்று மாலை சாவகச்சேரி நகர சபைக்கும் இன்று காலை யாழ் மாநகர சபைக்கும் கள விஜயத்தை மேற்கொண்டதுடன் தொடர்ந்து நல்லூர் பிரதேச சபை , வலி கிழக்கு பிரதேச சபை , வலி தெற்கு பிரதேச சபை மற்றும் வலி வடக்கு பிரதேச சபை ஆகியவற்றிற்கும் தமது கள விஜயத்தை மேற்கொண்டனர்.
இலங்கைக்கு வருகைதந்த குழுவிலுள்ள முக்கிய பிரதிநிதிகள் நாளை மீண்டும் பயணமாகவுள்ள நிலையில் குழுவிலுள்ள தொழில்நுட்ப விடயங்கள் சார் பிரதிநிதிகள் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கு கள ஆய்வு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.