• May 05 2024

மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்றுவிட்டு விபரீத முடிவெடுத்த கணவன்!

Tamil nila / Apr 25th 2024, 7:05 pm
image

Advertisement

தென்காசி அருகே, குடும்பத் தகராறில் மனைவியை உலக்கையால் கொடூரமாக தாக்கி கொலை செய்திருக்கிறார் ஒரு கணவர். மனைவியை அடுத்துக் கொன்றுவிட்டு பயத்தில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் திருவேங்கடம் தெற்கு பாரப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (70). இவரது மனைவி சீதை (65). வயதானாலும் இவர்களுக்கு இடையில் அடிக்கடி சண்டையும் சச்சரவுமாகவே இருந்திருக்கிறது.

நேற்று இரவு 11:30 மணியளவில் கணவன் மனைவிக்கு இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிப்போய் கைகலப்பாகி இருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி , வீட்டில் இருந்த உலக்கையால் தனது மனைவி சீதை தலையிலும், வாயிலும் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சீதை, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவியை அடித்துக் கொன்ற கருப்பசாமி அச்சத்தில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கரன்கோவில் பொலிஸார், சீதையின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்றுவிட்டு விபரீத முடிவெடுத்த கணவன் தென்காசி அருகே, குடும்பத் தகராறில் மனைவியை உலக்கையால் கொடூரமாக தாக்கி கொலை செய்திருக்கிறார் ஒரு கணவர். மனைவியை அடுத்துக் கொன்றுவிட்டு பயத்தில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் திருவேங்கடம் தெற்கு பாரப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (70). இவரது மனைவி சீதை (65). வயதானாலும் இவர்களுக்கு இடையில் அடிக்கடி சண்டையும் சச்சரவுமாகவே இருந்திருக்கிறது.நேற்று இரவு 11:30 மணியளவில் கணவன் மனைவிக்கு இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிப்போய் கைகலப்பாகி இருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி , வீட்டில் இருந்த உலக்கையால் தனது மனைவி சீதை தலையிலும், வாயிலும் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சீதை, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.மனைவியை அடித்துக் கொன்ற கருப்பசாமி அச்சத்தில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கரன்கோவில் பொலிஸார், சீதையின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement