புத்தளம் - குருநாகல் பிரதான வீதியின் கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
புத்தளத்திலிருந்து ஆனமடுவ பகுதிக்குச் சென்ற லொறியுடன் ஆனமடுவ பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற வான் மற்றும் வானிற்குப் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் ஆகியன மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது வானில் பயணித்த சாரதி உட்பட இருவரும், லொறியின் சாரதியும் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.