பொலன்னறுவை- ஓனேகம வீதியின் வலேகடே சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
லொறி ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற போது உழவு இயந்திரத்தில் சுமார் 10 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.