யாழ் வடமராட்சி அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர் உற்சவம் இன்றைய தினம் இடம்பெற்றது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ விநாயகப் பெருமான் முன்னே செல்ல முருகப்பெருமான் அடுத்துவர பின்னால் அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் பெரிய சித்திர தேரிலே வலம் வந்தார்.
இதேவேளை அடியார்கள் தூக்குக்காவடி, தீச்சட்டி, கரகாட்டம், அங்க பிரதிஷ்டை, பால் காவடி போன்ற நேர்த்திகளையும் நிறைவு செய்திருந்தனர்.
இன்றைய தேர்த் திருவிழாவிலே யாழின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் அடியார்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.