பணம் இல்லை என்ற ஒரே காரணத்தால் ஆம்புலன்ஸ் வர மறுத்தமையால் , நெஞ்சு வலியால் கடுமையாக அவதிப்பட்ட தனது தந்தையை 7 வயது மகன் தள்ளுவண்டியில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பரிதாப சம்பவம் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
ஏழை மக்களின் பொருளாதார நிலைமைகளினை கருத்திற்கொண்டு இலவசமாக கொண்டுவரப்பட்ட ஆம்புலன்ஸ் சேவைக்காக தற்பொழுது பணம் கேட்கும் நிலைமை உருவாகி இருப்பதே இந்த அவலத்திற்கு காரணம் என கூறப்படுகின்றது.
இந்நிலையில், சிறுவன் தனது தந்தையை தள்ளுவண்டியில் கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளமையினால் இதுகுறித்து விசாரணைகளை மேற்கொள்ள சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.