• May 04 2024

வயோதிபதித் தம்பதி கொடூரமாக வெட்டிப் படுகொலை! - இலங்கையில் பயங்கரம்

Chithra / Jan 24th 2023, 4:46 pm
image

Advertisement

வயோதிபர்களான கணவனும் மனைவியும் இனந்தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவம் அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவில் நேற்று நள்ளிரவு இடம்பெறுள்ளது.

72 வயதுடைய கணவனும், 69 வயதுடைய மனைவியுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வந்த நால்வர், வீட்டுக்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்த வயோதிபத் தம்பதியினர் இருவரையும் வெட்டிப் படுகொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட வயோதிபத் தம்பதியினரின் மூன்று பிள்ளைகளும் திருமணம் செய்து வெவ்வேறு மாவட்டங்களில் வசித்து வருகின்றனர் என்றும், வயோதிபத் தம்பதியினர், வீட்டில் தனிமையில் வசித்து வந்தனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும், கொலைச் சந்தேகநபர்களைத் தேடி மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைக்கு முன்பகை காரணமாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வயோதிபதித் தம்பதி கொடூரமாக வெட்டிப் படுகொலை - இலங்கையில் பயங்கரம் வயோதிபர்களான கணவனும் மனைவியும் இனந்தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்தக் கொடூர சம்பவம் அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவில் நேற்று நள்ளிரவு இடம்பெறுள்ளது.72 வயதுடைய கணவனும், 69 வயதுடைய மனைவியுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வந்த நால்வர், வீட்டுக்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்த வயோதிபத் தம்பதியினர் இருவரையும் வெட்டிப் படுகொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.கொலை செய்யப்பட்ட வயோதிபத் தம்பதியினரின் மூன்று பிள்ளைகளும் திருமணம் செய்து வெவ்வேறு மாவட்டங்களில் வசித்து வருகின்றனர் என்றும், வயோதிபத் தம்பதியினர், வீட்டில் தனிமையில் வசித்து வந்தனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.உயிரிழந்தவர்களின் சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும், கொலைச் சந்தேகநபர்களைத் தேடி மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தக் கொலைக்கு முன்பகை காரணமாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement