• Jun 27 2025

மீன்வாங்கச் சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

shanuja / Jun 26th 2025, 11:58 am
image


காக்கைதீவு சந்தைக்கு மீன் வாங்கச் சென்ற முதியவர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் நேற்று(25) உயிரிழந்துள்ளார். 


ஆனைக்கோட்டை - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்பி ரவீந்திரன் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 


குறித்த முதியவர்  நேற்று  காலை மீன் வாங்குவதற்காக காக்கைதீவு சந்தைக்கு சென்றிருந்தார். அங்கு அவர்  மயங்கி கீழே விழுந்துள்ளார்.


மயங்கி விழுந்த முதியவரை அங்கிருந்தோர்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை மேற்கொண்ட வேளை  அவர்  ஏற்கனவே  உயிரிழந்துள்ளார் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. 


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். 


அத்துடன் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மீன்வாங்கச் சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு காக்கைதீவு சந்தைக்கு மீன் வாங்கச் சென்ற முதியவர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் நேற்று(25) உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்பி ரவீந்திரன் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர்  நேற்று  காலை மீன் வாங்குவதற்காக காக்கைதீவு சந்தைக்கு சென்றிருந்தார். அங்கு அவர்  மயங்கி கீழே விழுந்துள்ளார்.மயங்கி விழுந்த முதியவரை அங்கிருந்தோர்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை மேற்கொண்ட வேளை  அவர்  ஏற்கனவே  உயிரிழந்துள்ளார் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். அத்துடன் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement