• May 09 2024

இலங்கையில் இப்படியும் ஒரு நிகழ்வா...! அனைவரையும் நெகிழச் செய்த பாடசாலை மாணவர்கள்..!samugammedia

Sharmi / Jun 9th 2023, 11:02 am
image

Advertisement

இம்முறை சாதாரண தரப் பரீட்சை எழுதிய பாடசாலை மாணவர்கள் சிலர் தாம் கல்வி கற்ற பாடசாலைக்கு மதிப்பளிக்கும் முகமாக விழுந்து வணங்கி விடைபெற்ற சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில்  தெஹிகொல்ல மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பரீட்சையின் இறுதி நாளான நேற்றையதினம் தாம் கற்ற பாடசாலையினை விழுந்து வணங்கி விடைபெற்று சென்றுள்ளனர்.

கடந்த 11 வருடங்களாக கல்வியை நல்கிய பாடசாலையினை விட்டுப்பிரிய மனமில்லாத மாணவர்கள் , தாம் பாடசாலைக்கு நன்றியினை தெரிவிக்கும் விதமாகவே விழுந்து வணங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், மாணவர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.



இலங்கையில் இப்படியும் ஒரு நிகழ்வா. அனைவரையும் நெகிழச் செய்த பாடசாலை மாணவர்கள்.samugammedia இம்முறை சாதாரண தரப் பரீட்சை எழுதிய பாடசாலை மாணவர்கள் சிலர் தாம் கல்வி கற்ற பாடசாலைக்கு மதிப்பளிக்கும் முகமாக விழுந்து வணங்கி விடைபெற்ற சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில்  தெஹிகொல்ல மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பரீட்சையின் இறுதி நாளான நேற்றையதினம் தாம் கற்ற பாடசாலையினை விழுந்து வணங்கி விடைபெற்று சென்றுள்ளனர்.கடந்த 11 வருடங்களாக கல்வியை நல்கிய பாடசாலையினை விட்டுப்பிரிய மனமில்லாத மாணவர்கள் , தாம் பாடசாலைக்கு நன்றியினை தெரிவிக்கும் விதமாகவே விழுந்து வணங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், மாணவர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement