கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றைய தினம்(16) இடம்பெற்றது.
புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட 9 கிராமங்களில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்களே இன்று மதிப்பளிக்கப்பட்டனர்.
ஆரம்ப நிகழ்வாக மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மலர் தூவி நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் கலந்துகொண்டதுடன் இதன்போது மாவீரர் பெற்றோர்களுக்கு அவர்களின் பிள்ளைகளின் நினைவாக நினைவு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.