அடுத்த மூன்று மாதங்களுக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு ஏற்கனவே அனுமதி கிடைத்துள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி முட்டை இறக்குமதி தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
முட்டை இறக்குமதி மூலம் சந்தையில் முட்டை தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளாந்தத் தேவையான ஒரு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அரச வர்த்தக கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர குறிப்பிட்டார்.