திருகோணமலையில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கடின பந்து கிரிக்கெட் சுற்று போட்டி நேற்றைய தினம் (27) ஸ்ரீ கோனேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு கொழும்பு நாலந்தா கல்லூரி 40 வயதுக்கு மேற்பட்ட அணியினரும். ஒரு T20 போட்டியும் ஒரு T10 போட்டியும் நடைபெற்றது.
முதல் போட்டியில், துடுப்பெடுத்தாடிய திருகோணமலை legends அணியினர் 181 ஓட்டங்களை 20 ஓவர்களில் பெற்றுக்கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு நாளந்த லெஜென்ட்ஸ் அணியினர் மட்டுப்படுத்தப்பட்ட 20 ஓவர்களில் 146 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற திருகோணமலை legends அணியினர் நூற்றி ஒரு ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு நாலந்தா அணியினர் 10 ஓவர்களில் 99 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். இரண்டாவது போட்டியில் ஒரு ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ள திருகோணமலை லெஜென்ஸ் அணியினர். இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற அடிப்படையில் கிண்ணத்தை சுவீகரித்தனர். பிரதம விருந்தினராக முன்னாள் மாகாண சபை தவிசாளர் ஆரியவதி களபதி கலந்து கொண்டார்.
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கடின பந்து கிரிக்கெட் சுற்று போட்டியில் லெஜென்ஸ் அணியினர் வெற்றி திருகோணமலையில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கடின பந்து கிரிக்கெட் சுற்று போட்டி நேற்றைய தினம் (27) ஸ்ரீ கோனேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு கொழும்பு நாலந்தா கல்லூரி 40 வயதுக்கு மேற்பட்ட அணியினரும். ஒரு T20 போட்டியும் ஒரு T10 போட்டியும் நடைபெற்றது.முதல் போட்டியில், துடுப்பெடுத்தாடிய திருகோணமலை legends அணியினர் 181 ஓட்டங்களை 20 ஓவர்களில் பெற்றுக்கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு நாளந்த லெஜென்ட்ஸ் அணியினர் மட்டுப்படுத்தப்பட்ட 20 ஓவர்களில் 146 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற திருகோணமலை legends அணியினர் நூற்றி ஒரு ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு நாலந்தா அணியினர் 10 ஓவர்களில் 99 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். இரண்டாவது போட்டியில் ஒரு ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ள திருகோணமலை லெஜென்ஸ் அணியினர். இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற அடிப்படையில் கிண்ணத்தை சுவீகரித்தனர். பிரதம விருந்தினராக முன்னாள் மாகாண சபை தவிசாளர் ஆரியவதி களபதி கலந்து கொண்டார்.