• May 13 2024

இலங்கையில் இறப்புக்கள் அதிகம் இடம்பெற அரசாங்கத்தின் செயற்பாடே காரணம் - து.ரவிகரன் தெரிவிப்பு

Tharun / Apr 28th 2024, 7:00 pm
image

Advertisement

மக்களை துன்புறுத்தி கொண்டு இருப்பதனால் மக்கள் இலங்கையில் இருக்க முடியாமல் வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள். அத்துடன் அரசாங்கத்தின் செயற்பாட்டால் முதல் இருந்ததனை விட தற்போதே இறப்புக்கள் அதிகமாக உள்ளது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

கரியல்வயல் சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ள இடங்களை இன்றையதினம் (28) களவிஜயம் மேற்கொண்டு கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

கரியல்வயல் பகுதியிலுள்ள மக்கள் தொடர்ச்சியாக நான்கு , ஐந்து தலைமுறையாக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களை கிட்டத்தட்ட 130 நபர்களுக்கு கடந்த வருடம் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பறவைகள் சரணாலயம் பகுதிக்குள் இருப்பதாக கூறி வழக்கு பதிவு செய்திருந்தார்கள்.

குறித்த நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கை நிறைவடைய சிறுதானிய பயிரச்செய்கையை மேற்கொள்வார்கள். 1901 ஆம் ஆண்டு நில அளவை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வரைபடம் இவர்களிடம் உள்ளது. 1908 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுதந்திரம் அடைவதற்கும் முன்னரான காலப்பகுதியில் வழங்கப்பட்ட உறுதிகளும் இருக்கின்றன.

தற்போது இலங்கை அரசாங்கமானது அட்டூழியமான ஆட்சி செய்யும் நடவடிக்கை முலம் மக்களுடைய காணிகளை பறித்து தங்களுடைய திணைக்களங்களங்களான வன ஜீவராசிகள், வன இலாகா, தொல்லியல், இல்மனைற், மகாவலி  இவ்வாறான திணைக்களங்களின் ஊடாகவும் இராணுவம், கடற்படை, விமானப்படை, சிவில் பாதுகாப்பு படை, பொலிஸார் போன்ற படையினர் ஊடாகவும் மக்களை விவசாயம் செய்ய முடியாதளவிற்கு நிற்கதியாக்கி பட்டினி போடுமளவிற்கு இவ் அரசாங்கம் தள்ளியுள்ளது.

இரணைப்பாலை, செம்மண்குன்று, அம்பலவன் பொக்கணை, மாத்தளன், வலயர்மடம்,  முள்ளிவாய்க்கால், புளியம்பொக்கணை, புதுக்குடியிருப்பு போன்ற இடங்களில் இருக்கின்ற மக்களுடைய நிலங்களே இவை.  

மக்கள் விவசாயம் மேற்கொள்ள வேண்டாமா? , அல்லது சிறுதானிய பயிர்ச்செய்கை மேற்கொள்ள வேண்டாமா? மக்களை பாதுகாக்க வேண்டியதே அரசாங்கம். மக்களை துன்புறுத்தி கொண்டு இருப்பதனால் மக்கள் இலங்கையில் இருக்க முடியாமல் வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள். அரசாங்கத்தின் நடவடிக்கையாலே முதல் இருந்ததை விட தற்போதே இறப்புக்கள் அதிகமாக உள்ளது.

தமிழர்களை எவ்வாறாவது நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற சிந்தனையோடே ஆட்சியாளர்கள் ஆட்சியை மேற்கொண்டு வருகின்றனர். தமிழர்கள் நாட்டின் பிரஜைகள் ஆதிகால பூர்வீக குடிமக்கள் தமிழர்களே. விடுதலைப்புலிகளது காலத்தில் நின்மதியாக இருந்தவர்கள் தமிழர்கள். 

இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்வதனால் உங்களுடைய சந்ததிக்கே இழுக்காக அமையும் என மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் இறப்புக்கள் அதிகம் இடம்பெற அரசாங்கத்தின் செயற்பாடே காரணம் - து.ரவிகரன் தெரிவிப்பு மக்களை துன்புறுத்தி கொண்டு இருப்பதனால் மக்கள் இலங்கையில் இருக்க முடியாமல் வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள். அத்துடன் அரசாங்கத்தின் செயற்பாட்டால் முதல் இருந்ததனை விட தற்போதே இறப்புக்கள் அதிகமாக உள்ளது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.கரியல்வயல் சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ள இடங்களை இன்றையதினம் (28) களவிஜயம் மேற்கொண்டு கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கரியல்வயல் பகுதியிலுள்ள மக்கள் தொடர்ச்சியாக நான்கு , ஐந்து தலைமுறையாக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களை கிட்டத்தட்ட 130 நபர்களுக்கு கடந்த வருடம் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பறவைகள் சரணாலயம் பகுதிக்குள் இருப்பதாக கூறி வழக்கு பதிவு செய்திருந்தார்கள்.குறித்த நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கை நிறைவடைய சிறுதானிய பயிரச்செய்கையை மேற்கொள்வார்கள். 1901 ஆம் ஆண்டு நில அளவை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வரைபடம் இவர்களிடம் உள்ளது. 1908 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுதந்திரம் அடைவதற்கும் முன்னரான காலப்பகுதியில் வழங்கப்பட்ட உறுதிகளும் இருக்கின்றன.தற்போது இலங்கை அரசாங்கமானது அட்டூழியமான ஆட்சி செய்யும் நடவடிக்கை முலம் மக்களுடைய காணிகளை பறித்து தங்களுடைய திணைக்களங்களங்களான வன ஜீவராசிகள், வன இலாகா, தொல்லியல், இல்மனைற், மகாவலி  இவ்வாறான திணைக்களங்களின் ஊடாகவும் இராணுவம், கடற்படை, விமானப்படை, சிவில் பாதுகாப்பு படை, பொலிஸார் போன்ற படையினர் ஊடாகவும் மக்களை விவசாயம் செய்ய முடியாதளவிற்கு நிற்கதியாக்கி பட்டினி போடுமளவிற்கு இவ் அரசாங்கம் தள்ளியுள்ளது.இரணைப்பாலை, செம்மண்குன்று, அம்பலவன் பொக்கணை, மாத்தளன், வலயர்மடம்,  முள்ளிவாய்க்கால், புளியம்பொக்கணை, புதுக்குடியிருப்பு போன்ற இடங்களில் இருக்கின்ற மக்களுடைய நிலங்களே இவை.  மக்கள் விவசாயம் மேற்கொள்ள வேண்டாமா , அல்லது சிறுதானிய பயிர்ச்செய்கை மேற்கொள்ள வேண்டாமா மக்களை பாதுகாக்க வேண்டியதே அரசாங்கம். மக்களை துன்புறுத்தி கொண்டு இருப்பதனால் மக்கள் இலங்கையில் இருக்க முடியாமல் வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள். அரசாங்கத்தின் நடவடிக்கையாலே முதல் இருந்ததை விட தற்போதே இறப்புக்கள் அதிகமாக உள்ளது.தமிழர்களை எவ்வாறாவது நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற சிந்தனையோடே ஆட்சியாளர்கள் ஆட்சியை மேற்கொண்டு வருகின்றனர். தமிழர்கள் நாட்டின் பிரஜைகள் ஆதிகால பூர்வீக குடிமக்கள் தமிழர்களே. விடுதலைப்புலிகளது காலத்தில் நின்மதியாக இருந்தவர்கள் தமிழர்கள். இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்வதனால் உங்களுடைய சந்ததிக்கே இழுக்காக அமையும் என மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement