• Sep 20 2024

கட்டுநாயக்கவில் தரையிறங்கும் பயணிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Chithra / Dec 12th 2022, 7:18 am
image

Advertisement

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கும் விமான பயணிகள் கொழும்பிற்கு செல்வதற்கு புதிய போக்குவரத்து மார்க்கம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் அமைச்சர்கள் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு விமானப் பயணிகளுக்கு புதிய புகையிரத சேவையை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புகையிரத நிலையம் வரையிலான சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு இது தொடர்பான வீதி நிர்மாணப் பணிகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதன்படி, விமான நிலையம் மற்றும் துறைமுகம் தொடர்பான தற்போதைய திட்டங்களுடன் இதனையும் நடைமுறைப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் தரையிறங்கும் பயணிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கும் விமான பயணிகள் கொழும்பிற்கு செல்வதற்கு புதிய போக்குவரத்து மார்க்கம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் அமைச்சர்கள் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.இதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு விமானப் பயணிகளுக்கு புதிய புகையிரத சேவையை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புகையிரத நிலையம் வரையிலான சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு இது தொடர்பான வீதி நிர்மாணப் பணிகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.இதன்படி, விமான நிலையம் மற்றும் துறைமுகம் தொடர்பான தற்போதைய திட்டங்களுடன் இதனையும் நடைமுறைப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement