வரலாற்று சிறப்புமிக்க மஸ்கெலியா புனித சூசையப்பர் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவானது பங்குத்தந்தை அருட்தந்தை குணசேகரன் அடிகளாரின் தலைமையில் 21.05.2023 கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
அதனை தொடர்ந்து திங்கள் முதல் வெள்ளி வரை நவநாள் திருப்பலிகள் பங்கு பிரதேச மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டு எமது அயல் பங்குகளை சார்ந்த அருட்தந்தையர்களால் பல ஆன்மீக கருத்துகளுடன் நிறைவேற்றப்பட்டது.
கடந்த சனிக்கிழமை மாலை ஆராதனை இடம்பெற்று நேற்று கண்டி மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அல்வின் பீட்டர் பெர்ணான்டோ அடிகளாரினால் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து பங்குத்தந்தை அருட்தந்தை கபிரியேல் குணசேகரன் அடிகளார் பாடிய மஸ்கெலியா பங்கிற்கான சூசையப்பர் பாடல் 'பொறுமையின் சிகரமே' என்று தொடங்கும் பாடலுக்கான இசைவெளியீடு செய்யப்பட்டது.
பல வருடங்களுக்கு பின் புனித சூசையப்பர் திருச்சுரூப பவனி மஸ்கெலியா நகரூடாக வலம்வந்தது.
இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பக்தியுடன் கலந்து கொண்டனர்.
மஸ்கெலியா புனித சூசையப்பர் தேவாலய வருடாந்த கொடி ஏற்றமும் திருவிழாவும் samugammedia வரலாற்று சிறப்புமிக்க மஸ்கெலியா புனித சூசையப்பர் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவானது பங்குத்தந்தை அருட்தந்தை குணசேகரன் அடிகளாரின் தலைமையில் 21.05.2023 கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து திங்கள் முதல் வெள்ளி வரை நவநாள் திருப்பலிகள் பங்கு பிரதேச மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டு எமது அயல் பங்குகளை சார்ந்த அருட்தந்தையர்களால் பல ஆன்மீக கருத்துகளுடன் நிறைவேற்றப்பட்டது.கடந்த சனிக்கிழமை மாலை ஆராதனை இடம்பெற்று நேற்று கண்டி மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அல்வின் பீட்டர் பெர்ணான்டோ அடிகளாரினால் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பங்குத்தந்தை அருட்தந்தை கபிரியேல் குணசேகரன் அடிகளார் பாடிய மஸ்கெலியா பங்கிற்கான சூசையப்பர் பாடல் 'பொறுமையின் சிகரமே' என்று தொடங்கும் பாடலுக்கான இசைவெளியீடு செய்யப்பட்டது. பல வருடங்களுக்கு பின் புனித சூசையப்பர் திருச்சுரூப பவனி மஸ்கெலியா நகரூடாக வலம்வந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பக்தியுடன் கலந்து கொண்டனர்.