• Apr 02 2025

மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வீதிக்கு இறங்குவதை தடுக்க அநுர வகுத்த திட்டம்! உதய கம்மன்பில பகிரங்கம்

Chithra / Apr 1st 2025, 8:45 am
image

 

உயிர்த்த ஞாயிறு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிராக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வீதிக்கு இறங்குவதை தடுப்பதற்காகவே ஏப்ரல் 21க்கு முன்னர் உண்மையை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உண்மையை வெளிப்படுத்த சுபநேரம் பார்க்க வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் உள்ள சர்வஜன சக்தி கட்சியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த மாதம் 21 ஆம் திகதிக்குள் உண்மையை பகிரங்கப்படுத்தாவிடின் அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்குவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்துக்கு எச்சரிகை விடுத்திருந்தார்.

அரசாங்கத்துக்கு எதிராக பேராயர் வீதிக்கு இறங்குவதை தடுப்பதற்காகவே 21 ஆம் திகதி முன்னர் குண்டுத்தாக்குதலின் உண்மையை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இருப்பினும் அந்த அறிக்கைகளின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஜனாதிபதி வெளிப்படுத்தும் உண்மையில் உள்ள பொறுப்பதாரி யார் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீதிபதிகளை விமர்சித்து நீதிமன்றத்துக்கு நேரடியாக அழுத்தம் பிரயோகித்துள்ளார். 

எனது வழக்கு விவகாரத்திலும் பதவிக்கான கௌரத்தை மீறி நீதிமன்றத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க முயற்சித்துள்ளார். 

நீதிமன்ற விவகாரத்தில் ஜனாதிபதி முன்பிள்ளை பாடசாலை பிள்ளை போல் செயற்படுகிறார். ஆகவே ஜனாதிபதி  சிறந்த சட்ட ஆலோசனைகளை வழங்க வேண்டும்  என்றார்


மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வீதிக்கு இறங்குவதை தடுக்க அநுர வகுத்த திட்டம் உதய கம்மன்பில பகிரங்கம்  உயிர்த்த ஞாயிறு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிராக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வீதிக்கு இறங்குவதை தடுப்பதற்காகவே ஏப்ரல் 21க்கு முன்னர் உண்மையை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.உண்மையை வெளிப்படுத்த சுபநேரம் பார்க்க வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.கொழும்பில் உள்ள சர்வஜன சக்தி கட்சியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இந்த மாதம் 21 ஆம் திகதிக்குள் உண்மையை பகிரங்கப்படுத்தாவிடின் அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்குவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்துக்கு எச்சரிகை விடுத்திருந்தார்.அரசாங்கத்துக்கு எதிராக பேராயர் வீதிக்கு இறங்குவதை தடுப்பதற்காகவே 21 ஆம் திகதி முன்னர் குண்டுத்தாக்குதலின் உண்மையை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இருப்பினும் அந்த அறிக்கைகளின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.ஜனாதிபதி வெளிப்படுத்தும் உண்மையில் உள்ள பொறுப்பதாரி யார் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீதிபதிகளை விமர்சித்து நீதிமன்றத்துக்கு நேரடியாக அழுத்தம் பிரயோகித்துள்ளார். எனது வழக்கு விவகாரத்திலும் பதவிக்கான கௌரத்தை மீறி நீதிமன்றத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க முயற்சித்துள்ளார். நீதிமன்ற விவகாரத்தில் ஜனாதிபதி முன்பிள்ளை பாடசாலை பிள்ளை போல் செயற்படுகிறார். ஆகவே ஜனாதிபதி  சிறந்த சட்ட ஆலோசனைகளை வழங்க வேண்டும்  என்றார்

Advertisement

Advertisement

Advertisement