• Apr 02 2025

நாயாற்று கடற்பகுதியில் நீராடிய யுவதிகள்- ஒருவர் உயிரிழப்பு:இருவர் வைத்தியசாலையில்..!

Sharmi / Apr 1st 2025, 8:52 am
image

முல்லைத்தீவு நாயாறு கடற்கரைப் பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த பெண்கள் குழுவினர் கடலில் நீராடிக் கொண்டிருந்த நிலையில் கடல் அலையில் மூன்று பெண்கள் சிக்கிக்கொண்டதில் மூவரும் கடலில் மூழ்கிய நிலையில் இரு யுவதிகள் உயிருடன் காப்பாற்றப்பட்டதுடன் ஒரு யுவதி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இச் சம்பவம் நேற்றையதினம்(31) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உடையார்கட்டு பகுதியில்  தையல் கற்கும் யுவதிகளும், தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் கப்ரக வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்கு வந்துள்ளனர்.

குறித்த பெண்கள் நாயாற்று கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென மூன்று பெண்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூவரில் இரு பெண்கள் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை நீரில் மூழ்கிய ஒரு யுவதி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






நாயாற்று கடற்பகுதியில் நீராடிய யுவதிகள்- ஒருவர் உயிரிழப்பு:இருவர் வைத்தியசாலையில். முல்லைத்தீவு நாயாறு கடற்கரைப் பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த பெண்கள் குழுவினர் கடலில் நீராடிக் கொண்டிருந்த நிலையில் கடல் அலையில் மூன்று பெண்கள் சிக்கிக்கொண்டதில் மூவரும் கடலில் மூழ்கிய நிலையில் இரு யுவதிகள் உயிருடன் காப்பாற்றப்பட்டதுடன் ஒரு யுவதி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.இச் சம்பவம் நேற்றையதினம்(31) இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,உடையார்கட்டு பகுதியில்  தையல் கற்கும் யுவதிகளும், தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் கப்ரக வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்கு வந்துள்ளனர்.குறித்த பெண்கள் நாயாற்று கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென மூன்று பெண்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூவரில் இரு பெண்கள் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை நீரில் மூழ்கிய ஒரு யுவதி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement