கொழும்பு - கண்டி வீதியின் பட்டாலிய கஜுபுர என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது இராணுவ வீரர்கள் சென்ற பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் அருகில் நின்றிருந்த 22 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்டான பிரதேசத்தில் வசித்து வந்த 22 வயதுடைய விதானகே திமுத்து ரசாஞ்சலி என்ற தனியார் நிறுவனம் ஒன்றின் காசாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதி தனது காதலனுடன் நீர்வீழ்ச்சி ஒன்றை பார்வையிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது முந்திரி வாங்குவதற்காக மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.