• May 20 2024

வவுனியாவில் பத்மநாபாவின் சிலை திறந்து வைப்பு!samugammedia

Sharmi / Apr 5th 2023, 1:25 pm
image

Advertisement

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா அவர்களின் சிலை திறப்புவிழா நிகழ்வு இன்று (5) இடம்பெற்றது.

வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்திக்கு அருகாமையில் புதிதாக நிறுவப்பட்ட சிலையடியில் குறித்த நிகழ்கள் இடம்பெற்றது. 

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் கே.அருந்தவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சிலைக்கு மலர்மாலை அணிவித்து திரைச்சீலையை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ஏனைய முக்கியஸ்தர்கள்,  மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் தமிழீழ விடுதலைஇயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைகழகம், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சிகளின் முக்கிஸ்தர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராஜா, ம.தியாகராஜா, நகரசபை முன்னாள் தவிசாளர் இ.கௌதமன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் பத்மநாபாவின் சிலை திறந்து வைப்புsamugammedia ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா அவர்களின் சிலை திறப்புவிழா நிகழ்வு இன்று (5) இடம்பெற்றது.வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்திக்கு அருகாமையில் புதிதாக நிறுவப்பட்ட சிலையடியில் குறித்த நிகழ்கள் இடம்பெற்றது. ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் கே.அருந்தவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சிலைக்கு மலர்மாலை அணிவித்து திரைச்சீலையை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ஏனைய முக்கியஸ்தர்கள்,  மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.நிகழ்வில் தமிழீழ விடுதலைஇயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைகழகம், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சிகளின் முக்கிஸ்தர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராஜா, ம.தியாகராஜா, நகரசபை முன்னாள் தவிசாளர் இ.கௌதமன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement