தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில், சம்பவத்துடன் தொடர்புடைய பொலீஸ் உத்தியோகத்தர்கள் நாளைய தினம்(07) வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மருதங்கேணிப் பகுதியில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.