நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினையடுத்து 4 கங்கைகளுக்கு அண்டிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்தவகையில், கிங் கங்கை, குடா கங்கையின் குடா கங்கை துணைப் படுகை, அத்தனகலு ஓயா மற்றும் நில்வலா ஆற்றுப் படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாயம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
இந்த நிலைமையை கருத்தில் கொண்டு மக்களை அவதானமாக இருக்குமாறும், குறிப்பாக கிளை வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.