நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினையடுத்து இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் மூன்று மாகாணங்கள் மற்றும் ஐந்து மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடிய அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், பதுளை, கேகாலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.