LGBTQIA+ சமூகத்தினர் தொடர்பான தெளிவூட்டல் மற்றும் குறித்த சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக ஊடகவியளாளர்கள், பொலிஸ் அதிகாரிக்கான தெளிவூட்டல் கருத்தமர்வு யாழ்ப்பணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில இன்று இடம்பெற்றது.
இக் கருத்தமர்வில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற "FRIDE WALK" இன் பின்னர் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட சாதக பாதக கருத்துக்கள் தொடர்பாக பிரதான விடயமாக கலந்துரையாடப்பட்டதுடன்.
ஊடகங்களில் எவ்வாறு செய்திகளை வெளியிடுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை எதிர்காலங்களில் தமது செயற்பாடுகளை விஸ்தரித்து சமூகத்தில் சம அந்தஸ்துடன் செயற்பட அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டுமென பிரதானமாக குறிப்பிடப்பட்டது