• Apr 17 2026

கெஹெலியவின் சொத்துக்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

Chithra / Oct 4th 2024, 4:10 pm
image

 

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பல வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிகளை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மேலும் நீடிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்றம், கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் 16 வங்கிக் கணக்குகள் மற்றும் 05 ஆயுள் காப்புறுதிக் காப்புறுதிகளை இன்று வரை இடைநிறுத்த உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கெஹெலியவின் சொத்துக்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு  முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பல வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிகளை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மேலும் நீடிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.முன்னதாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்றம், கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் 16 வங்கிக் கணக்குகள் மற்றும் 05 ஆயுள் காப்புறுதிக் காப்புறுதிகளை இன்று வரை இடைநிறுத்த உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement