மட்டக்களப்பு சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று (17) மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் ஒருவரே சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.
இவர், குற்றச் செயல் ஒன்றில் ஈடுபட்டார் என்ற காரணத்தால் கடந்த ஆறாம் திகதி வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் இருந்த போதே மரணமடைந்துள்ளார்.
இவ்வாறு மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணத்துக்கான காரணத்தை கண்டறிய சட்ட வைத்திய உதவியுடன் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் இளம் குடும்பஸ்தர் மர்ம மரணம். samugammedia மட்டக்களப்பு சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று (17) மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் ஒருவரே சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.இவர், குற்றச் செயல் ஒன்றில் ஈடுபட்டார் என்ற காரணத்தால் கடந்த ஆறாம் திகதி வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் இருந்த போதே மரணமடைந்துள்ளார்.இவ்வாறு மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மரணத்துக்கான காரணத்தை கண்டறிய சட்ட வைத்திய உதவியுடன் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.