• Sep 05 2025

மருத்துவ விஞ்ஞானியாக வருவதே இலட்சியம்; தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற மாணவி கருத்து

Chithra / Sep 5th 2025, 1:46 pm
image


தந்தையைப் போல் வைத்திய துறையில் மருத்துவ விஞ்ஞானியாக வருவதே எனது இலட்சியம் என புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைபெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி அரோனிக்கா ரேச்சல் தெரிவித்துள்ளார்.

தனது சாதனை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது பெயர் அரோனிக்கா ரேச்சல் கிசான். நான் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் கல்வி கற்கின்றேன். நான் புலமைப் பரிசில் பரீட்சையில் 189 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளேன்.

இதற்கு உறுதுணையாக இருந்த கடவுளுக்கு இந்த தருணத்தில் நன்றி கூறுகின்றேன். இரண்டாவதாக என்னை சிறப்பாக வழிநடத்தி என்னை உற்சாகப்படுத்தி எனக்கதக தம்மையே அர்ப்பணித்த எனது பெற்றோர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அடுத்து எனது அதிபர், ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர், எனக்கு கற்பித்த ஆசிரியர்கள், வகுப்பாசிரியர் ஆகியோருக்கும் நன்றிகள். என்னோடு பரீடசைக்கு தோற்றிய மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நான் எனது தந்தையைப் போல் வைத்திய துறையில் மருத்துவ விஞ்ஞானியாக வர வேண்டும் என்பதே எனது இலட்சியம் ஆகும் எனத் தெரிவித்தார்.

மருத்துவ விஞ்ஞானியாக வருவதே இலட்சியம்; தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற மாணவி கருத்து தந்தையைப் போல் வைத்திய துறையில் மருத்துவ விஞ்ஞானியாக வருவதே எனது இலட்சியம் என புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைபெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி அரோனிக்கா ரேச்சல் தெரிவித்துள்ளார்.தனது சாதனை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,எனது பெயர் அரோனிக்கா ரேச்சல் கிசான். நான் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் கல்வி கற்கின்றேன். நான் புலமைப் பரிசில் பரீட்சையில் 189 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளேன்.இதற்கு உறுதுணையாக இருந்த கடவுளுக்கு இந்த தருணத்தில் நன்றி கூறுகின்றேன். இரண்டாவதாக என்னை சிறப்பாக வழிநடத்தி என்னை உற்சாகப்படுத்தி எனக்கதக தம்மையே அர்ப்பணித்த எனது பெற்றோர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.அடுத்து எனது அதிபர், ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர், எனக்கு கற்பித்த ஆசிரியர்கள், வகுப்பாசிரியர் ஆகியோருக்கும் நன்றிகள். என்னோடு பரீடசைக்கு தோற்றிய மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நான் எனது தந்தையைப் போல் வைத்திய துறையில் மருத்துவ விஞ்ஞானியாக வர வேண்டும் என்பதே எனது இலட்சியம் ஆகும் எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement