• Apr 28 2024

தமிழர்களுக்கு தீர்வு வழங்கவேண்டுமென்ற சர்வதேசத்தின் அழுத்தத்தை குறைப்பதற்கே பிக்குகள் சதி- சாணக்கியன் எம்.பி காட்டம்!SamugamMedia

Sharmi / Feb 15th 2023, 11:26 am
image

Advertisement

75 ஆண்டுகளாக தமிழன் தனது போராட்ட வடிவங்களை மாற்றினாலும் உரிமைக்காக தொடர்ந்து போராடுகின்றனர் என சர்வதேசம் தற்போது உன்னிப்பாக அவதானிக்கின்ற இந்த தருணத்தில் சில பிக்குமார்கள் அதனை குழப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

உன்னிப்பாக அவதானித்து வருகின்ற சர்வதேசம் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வினை வழங்கவேண்டும் இல்லாவிட்டால் ஈழ தமிழர்கள் தொடர்ந்து போராடுவார்கள் என நினைத்து முன்வரும் போது அதனை குழப்பவே அரசியலமைபை பிக்குகள் கொழும்பில் எரித்ததாகவும் அத்துடன் மட்டக்கப்பிலுள்ள தேரர் தன்னை கொலைசெய்ய முயற்சிகள் இடம்பெறுவதாக பொய்யான தகவல்களை வழங்கி வருவதாக இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் கால்நடைகளை குறித்த பிக்கு இறைச்சிக்காக சுடுவதாகவும் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை அம்பிட்டியே சுமனரதன தேரர் வசிக்கும் அம்பாறை, கெவிலியாமடு அமரராமய விகாரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழர்களுக்கு தீர்வு வழங்கவேண்டுமென்ற சர்வதேசத்தின் அழுத்தத்தை குறைப்பதற்கே பிக்குகள் சதி- சாணக்கியன் எம்.பி காட்டம்SamugamMedia 75 ஆண்டுகளாக தமிழன் தனது போராட்ட வடிவங்களை மாற்றினாலும் உரிமைக்காக தொடர்ந்து போராடுகின்றனர் என சர்வதேசம் தற்போது உன்னிப்பாக அவதானிக்கின்ற இந்த தருணத்தில் சில பிக்குமார்கள் அதனை குழப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.உன்னிப்பாக அவதானித்து வருகின்ற சர்வதேசம் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வினை வழங்கவேண்டும் இல்லாவிட்டால் ஈழ தமிழர்கள் தொடர்ந்து போராடுவார்கள் என நினைத்து முன்வரும் போது அதனை குழப்பவே அரசியலமைபை பிக்குகள் கொழும்பில் எரித்ததாகவும் அத்துடன் மட்டக்கப்பிலுள்ள தேரர் தன்னை கொலைசெய்ய முயற்சிகள் இடம்பெறுவதாக பொய்யான தகவல்களை வழங்கி வருவதாக இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் மக்களின் கால்நடைகளை குறித்த பிக்கு இறைச்சிக்காக சுடுவதாகவும் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.இதேவேளை அம்பிட்டியே சுமனரதன தேரர் வசிக்கும் அம்பாறை, கெவிலியாமடு அமரராமய விகாரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement