வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வவுனியா குளத்தின் கரைப்பகுதியில் இன்று (19.03.2023) அதிகாலை சடலம் ஒன்று கண்டேடுக்கப்பட்டுள்ளது.
குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலமாக காணப்படுபவர் தொடர்பில் பொலிஸாரின் முதற்கட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
குறித்த சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசிவருவதால் ஒருசில நாட்களுக்கு முன்னரே அவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
வவுனியா நகரில் யாசகத்தில் ஈடுபவராக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளமையுடன் தடவியல் பொலிஸார் மற்றும் நீதவானின் விசாரணைகளுக்காக சடலம் குளத்தின் கரைப்பகுதியிலேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது
குளத்தில் இருந்து சடலம் மீட்பு - பொலிஸார் தீவிர விசாரணை SamugamMedia வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வவுனியா குளத்தின் கரைப்பகுதியில் இன்று (19.03.2023) அதிகாலை சடலம் ஒன்று கண்டேடுக்கப்பட்டுள்ளது.குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலமாக காணப்படுபவர் தொடர்பில் பொலிஸாரின் முதற்கட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.குறித்த சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசிவருவதால் ஒருசில நாட்களுக்கு முன்னரே அவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.வவுனியா நகரில் யாசகத்தில் ஈடுபவராக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளமையுடன் தடவியல் பொலிஸார் மற்றும் நீதவானின் விசாரணைகளுக்காக சடலம் குளத்தின் கரைப்பகுதியிலேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது