• May 20 2024

யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள பிரித்தானிய இளவரசி..!samugammedia

Tharun / Jan 9th 2024, 7:18 pm
image

Advertisement

பிரித்தானியாவின் இளவரசி  அவர்கள் 05 நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை  தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 11 ஆம் திகதி  வடமாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளும் நிலையில் பிரிட்டிஷ்  அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டு, மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகத்தினை பார்வையிடுவதுடன் பிரித்தானியா நூலக கோணரினையும் திறந்து வைக்கவுள்ளார். என அறியமுடிகிறது.

பிரித்தானியாவின் இளவரசியின்  மெய் கண்காணிப்பாளர்கள் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய தூதரக்குழுவினர்கள் இன்று மதியம் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வந்ததுள்ளனர். எதிர்வரும் 11 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள நிகழ்வு தொடர்பான ஏற்பாடுகள், வரவேற்பு ஒழுங்குகள், பாதுகாப்பு நடைமுறைகள், கண்காணிப்பாளர்களின் செயற்பாடுகள் தொடர்பாக  கலந்துகொள்பவர்களுக்கான ஒழுங்குகள் குறித்து ஆராயப்பட்டன.

இதில் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன், இலங்கைக்கான பிரித்தானிய தூதரக ஆலோசகர் கஜயனி பொன்னம்பலம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள பிரித்தானிய இளவரசி.samugammedia பிரித்தானியாவின் இளவரசி  அவர்கள் 05 நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை  தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 11 ஆம் திகதி  வடமாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளும் நிலையில் பிரிட்டிஷ்  அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டு, மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பொது நூலகத்தினை பார்வையிடுவதுடன் பிரித்தானியா நூலக கோணரினையும் திறந்து வைக்கவுள்ளார். என அறியமுடிகிறது.பிரித்தானியாவின் இளவரசியின்  மெய் கண்காணிப்பாளர்கள் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய தூதரக்குழுவினர்கள் இன்று மதியம் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வந்ததுள்ளனர். எதிர்வரும் 11 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள நிகழ்வு தொடர்பான ஏற்பாடுகள், வரவேற்பு ஒழுங்குகள், பாதுகாப்பு நடைமுறைகள், கண்காணிப்பாளர்களின் செயற்பாடுகள் தொடர்பாக  கலந்துகொள்பவர்களுக்கான ஒழுங்குகள் குறித்து ஆராயப்பட்டன.இதில் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன், இலங்கைக்கான பிரித்தானிய தூதரக ஆலோசகர் கஜயனி பொன்னம்பலம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement