வாக்னர் ஆயுதப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜ் விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை விமான விபத்தில் அவர் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் மரபணு பகுப்பாய்வு முடிவின் அடிப்படையில் அவர் உயிரிழந்துள்ளமையை ரஷ்யா இன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக தமக்கு போரின் போது உரிய ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்து, வாக்னர் ஆயுதப்படை மொஸ்கோவில் திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கியிருந்தது.
இதன்பின்னர், சமரச பேச்சுவார்தையின் மூலம் வாக்னர் படை யுக்ரைனில் ரஷ்ய படையினருடன் இணைந்து தொடர்ந்தும் யுக்ரைன் படைக்கு எதிரான மோதலில் ஈடுபட இணக்கம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், அவரின் மரணத்துக்கும் யுக்ரைனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என யுக்ரைன் ஜனாதிபதி வொலேடிமீர் செலன்ஸ்கி குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ப்ரிகோஜின் மரணம்: வெளியான மரபணு சோதனை ரஷ்யா வெளியிட்ட தகவல் samugammedia வாக்னர் ஆயுதப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜ் விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.கடந்த புதன்கிழமை விமான விபத்தில் அவர் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது.குறித்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் மரபணு பகுப்பாய்வு முடிவின் அடிப்படையில் அவர் உயிரிழந்துள்ளமையை ரஷ்யா இன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.முன்னதாக தமக்கு போரின் போது உரிய ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்து, வாக்னர் ஆயுதப்படை மொஸ்கோவில் திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கியிருந்தது.இதன்பின்னர், சமரச பேச்சுவார்தையின் மூலம் வாக்னர் படை யுக்ரைனில் ரஷ்ய படையினருடன் இணைந்து தொடர்ந்தும் யுக்ரைன் படைக்கு எதிரான மோதலில் ஈடுபட இணக்கம் தெரிவித்திருந்தது.இந்தநிலையில், அவரின் மரணத்துக்கும் யுக்ரைனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என யுக்ரைன் ஜனாதிபதி வொலேடிமீர் செலன்ஸ்கி குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.