• Apr 30 2024

வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் பஸ் மோதி விபத்து..! 08 பேர் வைத்தியசாலையில்!

Chithra / Apr 17th 2024, 12:32 pm
image

Advertisement

 

குருநாகல் – பொல்பித்திகம பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் இலங்கை போக்குரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமமைந்துள்ளனர்.

பொல்பித்திகம, ரம்பாகொடெல்ல பகுதியில் வீதியோரத்தில் லொறியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,

குருநாகலில் இருந்து – மடகல்ல நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து அதன் பின்னால் அதிவேகமாக வந்து மோதியுள்ளது.

இந்த விபத்தில், 8 பேர் காயமடைந்த நிலையில், பொல்பித்திகம ஆரம்ப வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

19 வயதிற்கும் 66 வயதிற்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலர் மேலதிக சிக்கிச்சைகளுக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

 

வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் பஸ் மோதி விபத்து. 08 பேர் வைத்தியசாலையில்  குருநாகல் – பொல்பித்திகம பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் இலங்கை போக்குரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமமைந்துள்ளனர்.பொல்பித்திகம, ரம்பாகொடெல்ல பகுதியில் வீதியோரத்தில் லொறியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,குருநாகலில் இருந்து – மடகல்ல நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து அதன் பின்னால் அதிவேகமாக வந்து மோதியுள்ளது.இந்த விபத்தில், 8 பேர் காயமடைந்த நிலையில், பொல்பித்திகம ஆரம்ப வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.19 வயதிற்கும் 66 வயதிற்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்களில் சிலர் மேலதிக சிக்கிச்சைகளுக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

Advertisement

Advertisement

Advertisement