• Oct 19 2024

பெருவில் கோர பேருந்து விபத்து - சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழப்பு! samugammedia

Tamil nila / Apr 12th 2023, 8:43 pm
image

Advertisement

தென் அமெரிக்க நாடான பெருவில் ஹூவான்கோ நகரில் இருந்து தலைநகரான லிமாவுக்கு அதிகாலை சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது.

குறித்த பேருந்தில் 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். பேருந்து அங்குள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையோரம் உள்ள ரிமாக் ஆற்றுக்குள் கவிழ்ந்தது விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் குழந்தைகள் உட்பட 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

படுகாயம் அடைந்தவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே ,பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெருவில் கோர பேருந்து விபத்து - சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழப்பு samugammedia தென் அமெரிக்க நாடான பெருவில் ஹூவான்கோ நகரில் இருந்து தலைநகரான லிமாவுக்கு அதிகாலை சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது.குறித்த பேருந்தில் 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். பேருந்து அங்குள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையோரம் உள்ள ரிமாக் ஆற்றுக்குள் கவிழ்ந்தது விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் குழந்தைகள் உட்பட 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.படுகாயம் அடைந்தவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே ,பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement