ஏரிபொருட்களின் விலை அதிகரித்த நிலையில், பேருந்து கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டீசல் விலை உயர்வின் தாக்கம் 4 சதவீதத்திற்கு மேல் இருந்தால், பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும், கட்டணம் அதிகரிக்கப்படுமா இல்லையா என்பது குறித்த அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியிடப்படும் என்றும் அதே அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 341 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.