உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட
பிறகும் 2 ஆயிரத்து 500 இற்கும் அதிகமான வேட்பாளர்கள் கொடுப்பனவு - வாகனம் -
எரிபொருள் ஆகிய சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்று
அறியமுடிகின்றது.
தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
இந்த
வேட்பாளர்கள் இன்னும் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களாகவும்
உறுப்பினர்களாகவும் இருப்பதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.