மத்திய வங்கி மீதான தாக்குதல் தொடர்பில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட இருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை குறித்து சட்டத்தரணி மனோகர டி சில்வா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
யுத்தத்தின்போது வடக்குகிழக்கிற்கு வெளியே விடுதலைப்புலிகள் இழைத்த மிகமோசமான அட்டுழியத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்தவர்களிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை குறித்து அரசாங்கம் விளக்கமளிக்கவேண்டும் என அவர் கோரியுள்ளார்.
விசேட சூழ்நிலைகளில் பொதுமன்னிப்பு வழங்கப்படுவதை நான் எதிர்க்கவில்லை, ஆனால் பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
1996 ஜனவரி 31ம் ம் திகதி மத்திய வங்கிதாக்குதலில் தொடர்புபட்டிருந்ததாக தண்டனை விதிக்கப்பட்ட இருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை குறித்தே ஜனாதிபதி சட்டத்தரணி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மத்திய வங்கி தாக்குதல் - தண்டனை வழங்கப்பட்ட இருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு - சட்டத்தரணி அதிருப்தி samugammedia மத்திய வங்கி மீதான தாக்குதல் தொடர்பில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட இருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை குறித்து சட்டத்தரணி மனோகர டி சில்வா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.யுத்தத்தின்போது வடக்குகிழக்கிற்கு வெளியே விடுதலைப்புலிகள் இழைத்த மிகமோசமான அட்டுழியத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்தவர்களிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை குறித்து அரசாங்கம் விளக்கமளிக்கவேண்டும் என அவர் கோரியுள்ளார்.விசேட சூழ்நிலைகளில் பொதுமன்னிப்பு வழங்கப்படுவதை நான் எதிர்க்கவில்லை, ஆனால் பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.1996 ஜனவரி 31ம் ம் திகதி மத்திய வங்கிதாக்குதலில் தொடர்புபட்டிருந்ததாக தண்டனை விதிக்கப்பட்ட இருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை குறித்தே ஜனாதிபதி சட்டத்தரணி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.