வரிவிதிப்பு முறையை மேலும் திறமையாக மாற்றுவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்படி, வரிவிதிப்பு முறையை மாற்றுவது தொடர்பான அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வரி விதிப்பு முறையில் உள்ள குறைபாடுகள் காரணமாக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.