திருகோணமலை -சேருநுவர பகுதியில் தமிழ்,சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் இன்று(20) இடம்பெற்றது.
சேருநுவர சிவில் பாதுகாப்புப்படையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முட்டி உடைத்தல், தலையணைச் சமர்,மரதன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
போட்டி நிகழ்ச்சிகளில் அதிகளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.