• Oct 01 2024

யாழில் பொலிஸார் - பொதுமக்கள் இடையே மோதல்! பற்றியெரிந்த கொட்டகை - துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் பதிவு SamugamMedia

Chithra / Mar 14th 2023, 8:35 am
image

Advertisement

யாழ்ப்பாணம் வடமராட்சி நாகர்கோவிலில் இரு தரப்புகளிடையே மயானம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை நேற்று திங்கட்கிழமை(13) பெரும் களேபரமாக மாறியுள்ளதுடன் துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக இருதரப்பையும் இன்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

நாகர்கோவிலில் மயானம் ஒன்றின் மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று(14) நடைபெறவுள்ளது. அந்தநிகழ்வுடன் தொடர்புடைய புலம்பெயர்வாசி ஒருவர் மீது நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக நாகர்கோவில் பகுதிக்கு நேற்று மாலை பொலிஸார் விசாரணைக்குச் சென்றுள்ளனர்.

இதையடுத்து விசாரிக்கச் சென்ற பொலிஸாருக்கும் அங்கு நின்ற இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. வாக்குவாதம் முற்றயதில் பொலிஸாரும் இளைஞர்களும் முரண்பட்டதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அந்த முரண்பாடு இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பொலிஸாருக்கு பொது மக்கள் தாக்கியதாவும், பொலிஸாரும் மக்களுக்கு தாக்கியதாகவும் தெரியவருகின்றது.

பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தியுள்ளனர். துப்பாக்கி தோட்டாக்கள் சம்பவ இடத்தில் இனங்காணப்பட்டுள்ளன.

பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தியதாக ஊர்மக்கள் தெரிவித்தனர். துப்பாக்கி தோட்டாக்கள் சம்பவ இடத்தில் இனங்காணப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இருதரப்பையும் இன்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழில் பொலிஸார் - பொதுமக்கள் இடையே மோதல் பற்றியெரிந்த கொட்டகை - துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் பதிவு SamugamMedia யாழ்ப்பாணம் வடமராட்சி நாகர்கோவிலில் இரு தரப்புகளிடையே மயானம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை நேற்று திங்கட்கிழமை(13) பெரும் களேபரமாக மாறியுள்ளதுடன் துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளது.இது தொடர்பாக இருதரப்பையும் இன்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நாகர்கோவிலில் மயானம் ஒன்றின் மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று(14) நடைபெறவுள்ளது. அந்தநிகழ்வுடன் தொடர்புடைய புலம்பெயர்வாசி ஒருவர் மீது நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக நாகர்கோவில் பகுதிக்கு நேற்று மாலை பொலிஸார் விசாரணைக்குச் சென்றுள்ளனர்.இதையடுத்து விசாரிக்கச் சென்ற பொலிஸாருக்கும் அங்கு நின்ற இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. வாக்குவாதம் முற்றயதில் பொலிஸாரும் இளைஞர்களும் முரண்பட்டதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.அந்த முரண்பாடு இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பொலிஸாருக்கு பொது மக்கள் தாக்கியதாவும், பொலிஸாரும் மக்களுக்கு தாக்கியதாகவும் தெரியவருகின்றது.பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தியுள்ளனர். துப்பாக்கி தோட்டாக்கள் சம்பவ இடத்தில் இனங்காணப்பட்டுள்ளன.பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தியதாக ஊர்மக்கள் தெரிவித்தனர். துப்பாக்கி தோட்டாக்கள் சம்பவ இடத்தில் இனங்காணப்பட்டுள்ளன.இது தொடர்பாக இருதரப்பையும் இன்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement