தியாகி பொன் சிவகுமாரின் 49வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலை கழக வளாகத்தில் இன்று காலை இடம்பெற்றது.
முதலில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மாணவர்களால் சிவகுமாரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அஞ்சலி உரையும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர்.