மின்னேரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரொடவெதி பிரதேசத்தில் நபரொருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 32 வயதுடைய மின்னேரிய, ரொடவெதி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
உயிரிழந்தவர் வெள்ளிக்கிழமை (16) இரவு மதுபானம் அருந்தி விட்டு தனது மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனைவியின் தந்தை குறித்த நபரை மண்வெட்டியால் தாக்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.