மதுரங்குளி- கடையாமோட்டை அர்- ரஷீதிய்யா அரபுக் கல்லூரியின் வெள்ளி விழாவும், பட்டமளிப்பு விழாவும் இன்று (31) இடம்பெற்றது.
மாணவர்களின் ஊர்வலத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான 32 ஹாபிழ்களுக்கும் 49 அல் ஆலீம்களுக்கும் இதன்போது பட்டமளிக்கப்பட்டது.
இதில் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் ஹாலீக் கலந்துகொண்டதுடன், விஷேட பேச்சாளராக இந்தியா திருநெல்வேலி தாரூல் உலூம் ஒஸ்மானிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேஹ் எஸ்.எஸ்.ஹைதர் அலி கலந்து கொண்டார்.
இதன்போது நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் விஷேட துஆப் பிராத்தனையும் இடம்பெற்றது.