பிரான்ஸில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை மீளவும் அமுல்படுத்துவதற்கான காலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக பிரதமர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக மக்கள் பொதுப் போக்குவரத்தில் மீண்டும் முகக் கவசம் அணியத் தொடங்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.
மேலும் பாதிக்கப்படக்கூடிய மக்களைச் சுற்றி இருக்கும் இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.
அதன்படி முகக் கவசம் அணிவது சட்டம் அல்ல எனினும் ஆபத்தை தவிர்ப்பதற்கு கட்டுப்பாடுகள் அமுல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.