• Apr 27 2026

டீசல் இறக்குமதியில் ஊழல், முறைகேடுகள் - கூட்டு எதிர்க்கட்சிகள் முறைப்பாடு

Chithra / Apr 27th 2026, 1:13 pm
image

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட டீசல் இறக்குமதியின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு கோரி முறைப்பாடொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


கூட்டு எதிர்க்கட்சியினால்  இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


குறித்த சம்பவத்தினால் அரசாங்கத்திற்கு பெருமளவிலான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டின் ஊடாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 


அதன்படி, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விபரங்களைக் கோரி, உரிய ஆவணங்களைப் பரிசோதித்து, பாரிய நஷ்டம் அல்லது மோசடி இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்துமாறும், 

அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும்  எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ள முறைப்பாட்டில் கோரியுள்ளனர்.

டீசல் இறக்குமதியில் ஊழல், முறைகேடுகள் - கூட்டு எதிர்க்கட்சிகள் முறைப்பாடு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட டீசல் இறக்குமதியின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு கோரி முறைப்பாடொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினால்  இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தினால் அரசாங்கத்திற்கு பெருமளவிலான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டின் ஊடாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதன்படி, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விபரங்களைக் கோரி, உரிய ஆவணங்களைப் பரிசோதித்து, பாரிய நஷ்டம் அல்லது மோசடி இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்துமாறும், அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும்  எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ள முறைப்பாட்டில் கோரியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement