மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாசார நிகழ்ச்சித்திட்டத்தின் "சித் ரூ 2025” நடனப்போட்டியில் கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான வடமாகாண ரீதியிலான நடனப் போட்டி கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இன்று (17) நடைபெற்றது.
போட்டியில் வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களின் மாற்றுத்திறனாளிகள் குழுவினர் பங்குபற்றியிருந்தனர். நடனப்போட்டியை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
வடமாகாண ரீதியிலான போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்ட இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இரண்டாம் இடத்தினை யாழ்ப்பாண மாவட்டமும், மூன்றாம் இடத்தினை வவுனியா மாவட்டமும் பெற்றுக்கொண்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான நடனப்போட்டி - தேசிய மட்டத்துக்கு தெரிவாகிய கிளிநொச்சி. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாசார நிகழ்ச்சித்திட்டத்தின் "சித் ரூ 2025” நடனப்போட்டியில் கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான வடமாகாண ரீதியிலான நடனப் போட்டி கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இன்று (17) நடைபெற்றது. போட்டியில் வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களின் மாற்றுத்திறனாளிகள் குழுவினர் பங்குபற்றியிருந்தனர். நடனப்போட்டியை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.வடமாகாண ரீதியிலான போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்ட இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இரண்டாம் இடத்தினை யாழ்ப்பாண மாவட்டமும், மூன்றாம் இடத்தினை வவுனியா மாவட்டமும் பெற்றுக்கொண்டது.