கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் 12 படங்களுக்கான மதிப்பீடுகள் இடம்பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கூறியுள்ளார்.
இதேவேளை, மீதமுள்ள பாடங்களின் மதிப்பீட்டையும் விரைவில் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடுகள் இந்த வாரத்தில் வழமைக்குக் திரும்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுவரை விடைத்தாள் பரீட்சைக்கு அழைக்கப்படவில்லை என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.