நாடாளுமன்றத்தில் கடந்த சனிக்கிழமை உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவதற்கான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பின் போது சமல் ராஜபக்ச சபையில் இருக்கவில்லை என ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை.
அத்துடன் அவர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் நாடாளுமன்ற செயலாளர் கூறியுள்ளார்.