• Sep 22 2024

தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட முக்கியஸ்தர்கள்!

Sharmi / Jan 26th 2023, 11:38 am
image

Advertisement

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இரு மொழிக் கொள்கை அமுல்படுத்துதல் தொடர்பில் பரிசோதிப்பதற்காக அரச கரும மொழிகள் ஆணைக்குழு  அதிகாரிகள் இன்று (26) தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு விஜயம் செய்தனர்.

பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதுடன் நாட்டில் தமிழ் சிங்கள இரு மொழிக் கொள்கைகளின் தேவைப்பாடு பற்றியும் ஆராயப்பட்டதுடன் இதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் மூவினங்களும் இணைந்த விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றது.

இலங்கை நாட்டினை வரைபடம் மூலமாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மூவினங்களின் சமய சகவாழ்வு இதன் போது வெளிப்படுத்தப்பட்டது.

இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் உடகெதர ,அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள்,சக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட முக்கியஸ்தர்கள் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இரு மொழிக் கொள்கை அமுல்படுத்துதல் தொடர்பில் பரிசோதிப்பதற்காக அரச கரும மொழிகள் ஆணைக்குழு  அதிகாரிகள் இன்று (26) தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு விஜயம் செய்தனர்.பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதுடன் நாட்டில் தமிழ் சிங்கள இரு மொழிக் கொள்கைகளின் தேவைப்பாடு பற்றியும் ஆராயப்பட்டதுடன் இதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் மூவினங்களும் இணைந்த விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றது.இலங்கை நாட்டினை வரைபடம் மூலமாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மூவினங்களின் சமய சகவாழ்வு இதன் போது வெளிப்படுத்தப்பட்டது.இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் உடகெதர ,அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள்,சக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement