செல்போனை சார்ஜ்ஜில் போட்டபடி பாவித்துக்கொண்டிருந்த கொண்டிருந்தபோது திடீரென செல்போன் வெடித்து இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை விசித்திர ராஜபுரத்தில் வசித்து வந்த 32 வயதான கோகிலா என்னும் இளம்பெண்ணின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் தனது 9 வயதான மகனுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், கோகிலா செல்போன் மற்றும் கடிகாரம் சரி செய்யும் கடையை நடத்தி வந்தார்.
இதன் போது நேற்று அவர் தனது செல்போனை சார்ஜ் போட்டபடியே அதில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென செல்போன் வெடித்து சிதறியது.
அதனால், கடை முழுவதும் தீப்பற்றி எறிந்ததால் கோகிலாவின் உடல் முழுவதும் தீப்பிடித்துள்ளது.
இந்நிலையில் அலறித் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். .
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோகிலாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசியதால் விபரீதம். இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia செல்போனை சார்ஜ்ஜில் போட்டபடி பாவித்துக்கொண்டிருந்த கொண்டிருந்தபோது திடீரென செல்போன் வெடித்து இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை விசித்திர ராஜபுரத்தில் வசித்து வந்த 32 வயதான கோகிலா என்னும் இளம்பெண்ணின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் தனது 9 வயதான மகனுடன் தனியாக வசித்து வந்தார்.இந்நிலையில், கோகிலா செல்போன் மற்றும் கடிகாரம் சரி செய்யும் கடையை நடத்தி வந்தார்.இதன் போது நேற்று அவர் தனது செல்போனை சார்ஜ் போட்டபடியே அதில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென செல்போன் வெடித்து சிதறியது. அதனால், கடை முழுவதும் தீப்பற்றி எறிந்ததால் கோகிலாவின் உடல் முழுவதும் தீப்பிடித்துள்ளது.இந்நிலையில் அலறித் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். .இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோகிலாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.